தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாற்றுத் திறன் மாணவர்கள் பகல்நேர பராமரிப்பு மையத்திற்கு, நலத்திட்ட உதவியாக அண்ணா ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் செந்தில் புதிய தொலைக்காட்சி வழங்கினார். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்(பொ) முருகன், பாபநாசம் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.