தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் தலைமையில் அனைத்து தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ஒய்.கிகேட்டோ சேம, தேர்தல் செலவின பார்வையாளர் ஜான்வி திவாரி, காவல் தேர்தல் பார்வையாளர் மரு.எஸ்.டி.சரணப்பா ஆகியோர் பேசினர்.