தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கிரீன் டூர் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, 100 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்னப்பூரணி உணவக உரிமையாளர் சிவக்குமார், அன்பு பேக்கரி உரிமையாளர் சீனிவாசன், பி.எஸ்.என் பில்டர் உரிமையாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.