districts

img

சத்யம் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் செய்தியாளர் மறைவு

முதலமைச்சர் இரங்கல்  தஞ்சாவூர், செப்.29  சத்யம் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்த அலெக்சாண்டர் உடல்நலக் குறைவால் வியாழனன்று காலமானார்.  அவரது மறைவிற்கு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள் ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், சத்யம் டிவி தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக 12 ஆண்டு கள் பணியாற்றியும், ஊடகத் துறையில்  25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவ ருமான அலெக்சாண்டர் (46), உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அலெக்சாண்டரை இழந்து வாடும், அவரது  குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர் களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது  ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு கட்சி  தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள் ளனர்.  சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை  பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மறைந்த அலெக்சாண்டரின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட் டம் சில்வர்புரம் கொண்டு செல்லப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை அடக்கம் செய்யப் பட்டது. இதையொட்டி, தஞ்சாவூர் பத்திரிக்கை யாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அலெக்சாண்டர் உருவப் படத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.வி. கண்ணன், சிபிஎம் சி.ஜெயபால், மாநகரக் குழு உறுப்பினர் ராஜன், மாணவர் சங்கம் அர்ஜுன், அனைத்து கட்சி தலைவர்கள், விவ சாயத் சங்க தலைவர்கள் மற்றும் பத்திரி கையாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.  மறைந்த அலெக்சாண்டருக்கு மனைவி பொன்மேரி மற்றும் பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.