தஞ்சாவூர் பெரிய கோயிலை ட்ரோன் மூலம் படம் பிடித்தவர் கைது
தஞ்சாவூர், ஏப்.19- தஞ்சாவூர் பெரிய கோயிலை அனுமதி யின்றி ட்ரோன் மூலம் படம் பிடித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயி லின் மேல் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் படம் எடுக்க இந்திய தொல்பொருள் துறையினர் தடை விதித் துள்ளனர். இந்நிலையில், தஞ்சா வூர் பெரிய கோயில் கோ புரத்தின் தென்பகுதியில், புதன்கிழமை மாலை ட்ரோன் கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்தது. உடனடியாக அங்கு பாது காப்பு பணியில் இருந்த தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய தலை மைக் காவலர் பாக்கிய லட்சுமி, ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்தவரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் படம் எடுத்ததும், அந்நபர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அருண்பிரசாத் (26) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் கேமரா மற்றும் அதற்குரிய கருவிகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
வாக்குச்சாவடியிலேயே திமுக தொண்டரை தாக்கிய அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்
மயிலாடுதுறை, ஏப்.19 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் கிராமத்தில் வாக்குச்சாவடி முன்பே, திமுக இளைஞர் ஒருவரை அதிமுகவைச் சேர்ந்த இருவர் தாக்கியதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள சௌரிராசன் உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் காலை முதல் அமைதியாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்து வந்த நிலையில், பிற்பகலில் திமுக இளைஞரான திருவிளையாட்டம், குப்புரான்தோப்பு பகுதி யைச் சேர்ந்த அருண் என்பவர் தங்கள் உறவி னர்களான வயதான முதியவர்களை வாக்க ளிக்க அழைத்து வந்துள்ளார். இதை கண்ட அதிமுக பிரமுகர்களான திருவிளையாட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா, இளந்தமிழன் ஆகியோர் அவரை வாக்குச்சாவடி வாசலிலேயே காவ லர்கள் முன்பாக கண்மூடித்தனமாக தாக்கி யுள்ளனர். தகவலறிந்த திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென போராட்டத்தில் ஈடு பட்டனர். காயமடைந்த அருண் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பாதுகாப்புக்காக கூடுதலான காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு இடையூறின்றி நடைபெற்றது.
குமரியில் மலையோரம் கோடை மழை
நாகர்கோவில், ஏப்.19- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார கால மாக கோடை வெயிலின் தாக்கம் தெரியாத அளவுக்கு பரவ லாக அவ்வப்போது கோடை மழை பெய்து மக்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது. ஏப்ரல் 18 வியாழனன்று மலை யோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துள்ளது. வெள்ளியன்று அவ்வப்போது மேக மூட்டத்துடன் சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. வாக்குப்பதிவு நாளில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் களுக்கு இயற்கை சாதகமாக அமைந்தது. வெள்ளியன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் I அணைப் பகுதியில் 6 மி.மீட்டர் மழை பெய்துள்ளது, பெருஞ்சாணி 1 மி.மீ, புத்தன் அணை 1.6 மி.மீ சிவலோகம் (சிற்றார் II) 5.4 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கேரளத்தில் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக குமரி மாவட் டத்திற்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அணைகளில் நீர்மட்டம் சிற்றார் I அணையின் மொத்த உயரமான 18 அடியில் 9.28 அடி தண்ணீர் உள்ளது. சிற்றார் II அணையின் 18 அடியி்ல் 9.38 அடி தண்ணீர் உள்ளது, பேச்சிப்பாறை அணையின் 48 அடியில் 42.53 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர் வரத்து விநாடிக்கு 90 கன அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் 77 அடியில் 47.7 அடி தண்ணீர் உள்ளது. நீர் வரத்து 43 கன அடியாகவும் வெளி யேற்றம் 21 கன அடியாகவும் உள்ளது.
தூத்துக்குடியில் 59.96 சதவீதம் வாக்குப்பதிவு
தூத்துக்குடி,ஏப்.19- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 59.96 சதவீத வாக்குகள் பதிவானது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அதிகபட்சமாக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 66.89 சதவீதமும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 62.70 சதவீதம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 61.18 சதவீதமும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 59.13 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள் ளது. குறைந்தபட்சமாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் 55.26 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.