districts

img

பாடப்புத்தகத்தில் உளவியல் ரீதியான கருத்துக்களை இணைத்திடுக! மாணவிகள் சங்க மாநாடு கோரிக்கை

மயிலாடுதுறை, மார்ச் 6-  மயிலாடுதுறையில் உலக மகளிர் தித்தையொட்டி இந்திய மாணவர் சங்கம்  சார்பில் மாணவிகள் மாநாடு நடை பெற்றது.  மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தீபிகா தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ துவக்கி வைத்தார். ஆர்.ஜனனி வரவேற்றார். வினோதா, மீரா, அபிநயா, ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் தீபா, மாவட்டத் தலைவர் மணிபாரதி, மாதர்  சங்க மாவட்டச் செயலாளர் வெண்ணிலா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தி,  ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் மாநி லத் தலைவர் எஸ்.லீலாவதி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கலா ஆகி யோர் பேசினர். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கார்த்திகாதேவி நன்றி கூறினார்.   மாநாட்டில், மாணவிகள் மாவட்ட புதிய  கன்வீனராக  ஜி.தீபிகா, துணை கன்வீனராக வினோதா, தீபா  உள்ளிட்ட 11 பேர் கொண்ட  மாணவிகள் உபக்குழு தேர்வு செய்யப் பட்டது.  மாநாட்டில், பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட வேண்டும், அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் சானிடரி நாப்கின் வசதி செய்து கொடுக்க வேண்டும், பள்ளி பாடப்  புத்தகத்தில் உளவியல் ரீதியான கருத்துக்களை இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.