தஞ்சாவூர், மார்ச் 18- லட்சக்கணக்கில் குத்தகை பாக்கி செலுத்த நிர்ப்பந்தம் செய்யும் கோயில் நிர்வாகம் தெளி வான தகவல்களை தரக் கோரி, தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோயில் செயல் அலு வலரிடம் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம், வெண்டையம்பட்டி கிரா மத்தில் உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான, சுமார் 200 ஏக்கருக்கு மேலான நஞ்சை நிலங்களில், அதே கிரா மத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தலைமுறை தலை முறையாக குத்தகை சாகுபடி செய்து வருகின்றனர். 40 பசலி ஆண்டுகள்... இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு, “ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை குத்தகை நிலுவை இருப்பதாகவும், உடனடியாக குத்தகை செலுத்த வேண்டும்” என திருக்கோயில் செயல் அலுவல ரிடம் இருந்து அறிவுறுத்தப்பட்டிருந் தது. மேற்படி நிலுவைத் தொகை, கடந்த 40 பசலி ஆண்டுகளாக மொத்தமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு அடி மனை மற்றும் குத்தகை விவசாயி கள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாயி களிடம் கலந்துரையாடினர். பிர்கா வாரி, பசலி வாரி கணக்கு தேவை அந்த அடிப்படையில், திங்கள் கிழமை திருக்காட்டுப்பள்ளியில் உள்ள, திருக்கோயில் செயல் அலு வலர் அலுவலகத்தில், சங்கத் தின் கிராம நிர்வாகிகளான இம்மா னுவேல், ராஜாங்கம், ராஜேந்தி ரன், ராஜகுரு உள்ளிட்ட விவசாயி களுடன் மாவட்டச் செயலாளர் எம்.ராம் திருக்கோயில் செயல் அலு வலர் விஜயராகவனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “விவசாயி கள் தங்கள் நிலுவைத் தொ கையை தெளிவாக அறிந்து கொள் ளும் வகையில், 40 பசலி ஆண்டு களை ஒவ்வொரு பிர்காவாக, ஒவ் வொரு பசலி வாரியாக தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோயில் நிர்வாகத்தினர், “குத்தகை தாரர்கள் கோரியுள்ள தகவலை உடனே தருவதாக” தெரிவித்தனர். ‘கோயில் நிர்வாகத்தினர் அளிக் கும் பதிலை பெற்று, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப் படும்’ என தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாது காப்பு சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம் தெரிவித்துள்ளார்.