ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகளை கண்டித்தும், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்.கே.முருகன், மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மு.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் பொன்ஜெயராம் ஆகியோர் பேசினர்.