districts

img

மின் கம்பத்தில் மோதிய டேங்கர் லாரி

பாபநாசம் ஏப்.25 - பாபநாசம்- சாலியமங்கலம் மெயின் சாலையில், பாப நாசம் அருகே வலங்கைமான் காவல் சரகத்திற்குட்பட்ட வடக்கு நாயகன்பேட்டை அருகே மதுரையில் இருந்து கும்பகோணம் நோக்கி வியாழனன்று அதிகாலை புதிய  டேங்கர் லாரி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுந ரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மெயின் சாலை அருகில்  இருந்த மின் கம்பம் மீது மோதியது. இதில் ஒரு மின் கம்பம்  முறிந்தது. மற்றொரு மின் கம்பம் சாய்ந்தது.  இதில் லாரி ஓட்டுநர், அவருடன் பயணித்த இரண்டு  பேர் காயமடைந்தனர். மின் கம்பம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மின் கம்பத்தை ஒட்டியிருந்த வீடு மீது லாரி மோதியிருக்கும். இது குறித்து வலங்கைமான் போலீ சார் விசாரணை மேற்கொண்டனர்.