திருவாரூர், ஏப்.10 - இந்தியாவில் பாசிச மோடி அரசு, கொடுங்கோல் அரசாக செயல்பட்டு வருகிறது என திராவிடர் கழக தலைமைக் கழக பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வம் விமர்சித்தார். இந்தியா கூட்டணி யின் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நாகை நாடாளு மன்ற வெற்றி வேட்பாளர் வை.செல்வ ராஜை ஆதரித்து, திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பரப்புரை தெரு முனை கூட்டங்கள் திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னி லம் ஒன்றியங்களில் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் நன்னிலம் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு செய லாளரும், சிபிஎம் மாவட்டச் செயலாள ருமான ஜி.சுந்தரமூர்த்தி மற்றும் இந்திய கூட்டணி கட்சியினர் பங்கேற்ற னர். சிபிஐ வேட்பாளர் வை.செல்வ ராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத் தில் வாக்களிக்க வேண்டி, திராவிட கழகத்தின் தலைமைக் கழக பேச்சா ளர் தஞ்சை பெரியார் செல்வம் குட வாசல் பேருந்து நிலையம் அருகே வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், உலக கொடுங்கோலர்கள் ஹிட்லர், இடி அமீன், முசோலினி ஆகியோர் களை மிஞ்சும் வகையில், இந்தியா வில் பாசிச மோடி அரசு கொடுங்கோல் அரசாக செயல்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சியினால், கொடுங்கோ லர்கள் அனைவரும் தடம் தெரியா மல் வீழ்ந்தார்கள் என்பது வரலாறு. மணிப்பூரில் பழங்குடியின மக்களி டமிருந்து வனத்தை கைப்பற்ற, மதக் கலவரங்களை தூண்டி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் செயல்படும் பாசிச மோடி அரசை, தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் துடைத்தெறிய வேண்டும். இந்தத் தேர்தலில் வீழ்த்த வில்லை என்றால், இனி ஜனநாயக முறையில் வாக்கு செலுத்தும் முறையே இருக்காது. ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே தேர்தல் என்ற பாசிச கொள்கையை அமல்படுத்தி ஜனநாய கத்தை குழி தோண்டி புதைக்கும் செயலில் ஒன்றிய பாசிச பாஜக அரசு ஈடுபடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும். நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் சிபிஐ வேட்பாளர் வை. செல்வராஜூவுக்கு, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து வாழ்க்கை மற்றும் பூந்தோட்டம், நன்னிலம் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.