தஞ்சாவூர், ஆக.30 - பொதுமக்களின் கோரிக்கைகளை 40 நாட்களுக்குள் அதிகாரிகள் தீர்க்க வேண்டும் என மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டத்தில் நாடாளு மன்ற உறுப்பினர் ச.முரசொலி வலி யுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். குழுவின் இணைத் தலைவரும், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சுதா, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பி னர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், சாக்கோட்டை க.அன்பழ கன், என்.அசோக்குமார், எம்.எச்.ஜவா ஹிருல்லா, மாநகராட்சி மேயர்கள் சண். ராமநாதன், கு.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், குழுவின் தலைவரும், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ச.முரசொலி, தன்னி டம் உள்ள பட்டியலின்படி அரசுத்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங் கேற்றுள்ளனராக என அட்டனென்ஸ் எடுத்தார். துறை வாரியாக அதிகாரிகள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தினர். காவல்துறை சார்பில் எந்த ஒரு அதிகாரியும் பங்கேற் கவில்லை. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு மாறு மாவட்ட ஆட்சியருக்கு முர சொலி எம்.பி., உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறை வாரியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிலுவையில் உள்ள பணிகள், அதன் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர். நிறைவாக நாடாளுமன்ற உறுப்பி னர் ச.முரசொலி பேசுகையில், “தஞ்சா வூர் மாநகராட்சியில் உள்ள குப்பை கிடங்கை நகரின் வெளிப்பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும். புதை சாக்கடை பராமரிப்பில் போதிய கவனம் செலுத்த வேண்டும். மாவட்டங் களில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீரை நிரப்பவும், தேவைப்படும் இடங்களில் தூர்வாரும் பணியையும், ஆக்கிரமிப்பு களையும் அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பட்டா கேட்டு அதிகளவில் மனு அளிக்கின் றனர். அதேபோல் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஏராளமானோர் தங்க ளது கோரிக்கைகளை மனுவாக வழங்குகின்றனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதற்கான தீர்வை 40 நாட்களுக்குள் மக்கள் பிரதி நிதிகள் முன்னிலையில், முகாம் நடத்தி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத் தப்படும் வீடு கட்டும் திட்டத்தில், நிலு வைப் பணிகள் அதிகமாக உள்ளன. இதனை முடுக்கிவிட வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் முறைகேடு ஏதும் இல்லா மல் செயல்படுத்த வேண்டும். மக்களுக் கான வளர்ச்சித் திட்டங்களில் தொய் வின்றி அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். இதுபோன்ற கூட்டங்களில் அரசின் துறை சார்ந்த உயர் அதிகாரி கள் பங்கேற்க வேண்டும். இதர பணியா ளர்களை அனுப்பி வைக்கக் கூடாது” என்றார்.