districts

img

தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பட்டமளிப்பு விழாவை உடனே நடத்துக!

தஞ்சாவூர், பிப்.29 -  தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடு நடைபெற்றது.  மாநாட்டில் மாநில துணைச் செயலாளர் ஜனார்த்தனன், தஞ்சை மாவட்டச் செயலாளர் சந்துரு, மாவட்டத் தலைவர் அர்ஜுன் ஆகி யோர் பேசினர்.  இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவ ராக ரஞ்சித், கிளைச் செயலாள ராக பிரேம்குமார், துணைத் தலை வராக சரோஜினி, ஹரிஷ், ரமணன் ஆகியோரும், துணைச் செயலாள ராக ஜெனிபர், ஹரிஷ், ஜோஸ்வா ஆகியோரும்  தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில்,  “மன்னர் சரபோஜி கல்லூரியில் வரலாற்று துறை, தாவரவியல் துறை, மற்றும் காட்சி தொடர்பு துறைகளை அமைக்க வேண்டும். 2 ஆண்டுகளாக நடை பெறாமல் உள்ள பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்திட வேண்டும். மன்னர் சரபோஜி கல்லூரியில், மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை அமைக்கவேண்டும்.  எஸ்.சி, எஸ்.டி, மாணவர் களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் படித்து, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மன்னர் சரபோஜி கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்திட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.