புதுக்கோட்டை, டிச.5 - ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தைக் எதிர்த்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் நுகர்வோ ரிடம் மனுக்கள் பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரிய அலுவல கங்களில் அளிக்கப்பட்டது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத் தும் திட்டத்தை அனைத்து மாநி லங்களிலும் அமல்படுத்த வலி யுறுத்தி வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தாத மாநி லங்களுக்கு மானியத்தை விடு விக்க ஒன்றிய அரசு மறுத்து வரு கிறது. இந்நிலையில், மானியத்தை தராவிட்டாலும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கேரள அரசு அறிவித்து விட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்தும், தமிழ்நாடு அரசு இத்திட் டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மின் நுகர்வோரிடம் மனுக்கள் பெற்று, நூற்றுக்கணக்கான மின் வாரிய அலுவலகங்களில் அதிகாரி கள் மூலமாக தமிழ்நாடு முதல்வ ருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடை பெற்ற இந்த இயக்கத்தில் கட்சி யின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் ஆலங்குடி, கோவிலூர், திருவரங்குளம், வல்லத்திராகோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஒன்றி யச் செயலாளர் எல்.வடிவேல், நகரச் செயலாளர் ஏ.ஆர்.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோரும், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் வடகாட்டில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.மதியகழன், ஒன்றி யக்குழு உறுப்பினர் செல்வ குமார் உள்ளிட்டோரும் பங்கேற்ற னர். அறந்தாங்கி, நாகுடி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற போராட் டத்தில் ஒன்றியச் செயலாளர் நாரா யணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். கந்தர்வகோட் டையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். ஆவுடை யார்கோவிலில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற் றனர். அரிமளத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஜனார்த்த னன், ஒன்றியச் செயலாளர் ஆர்.வி. ராமையா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.