தஞ்சாவூர், செப்.5- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சார்பில் மாணவர் எழுச்சித் தமிழ் மாநாடு செப்.9 அன்று நடைபெற வுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், கூட்டியக்க ஒருங்கிணைப் பாளருமான சி.சுப்பிரமணியம் செய்தி யாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கோவையில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் 2022, செப்டம்பர் 24 அன்று தொடங்கப்பட்டது. இதற்கு அடுத்த நாளான 25 ஆம் தேதி கோவை யில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடத்தப்பட்டது. கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடை பெற்ற தமிழ் வழிபாட்டுக்கு வட மொழிப் பற்றாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு அமைத்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் புகுந்து இடை யூறு செய்தனர். அவர்களுக்கு எதிர்வினை ஆற்றும் விதமாக கரூரில் இக்கூட்டியக்கத்தின் சார்பில் ஆகமத் தமிழ் எழுச்சி மாநாட்டை இந்தாண்டு மார்ச் 25 அன்று நடத்தினோம். பின்னர், சேலம் ராசிபுரத்தில் ‘எங்கும் தமிழ், எதி லும் தமிழ் எழுச்சி மாநாடு’ ஜூன் 10 அன்று நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள கரி காற்சோழன் கலையரங்கத்தில் மாண வர் எழுச்சித் தமிழ் மாநாட்டை செப்டம் பர் 9 அன்று நடத்தவுள்ளோம்.
இந்த மாநாட்டை செப்.9 அன்று காலை தமிழ் வளர்ச்சி, செய்தி, விளம்ப ரத் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கிறார். சிறுபான்மையி னர் நலன், அயலகத் தமிழர்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கருத்துரையாற்றுகிறார். பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை கௌமார மடால யம் சிரவை ஆதீனம் இராமானந்த குமர குருபர அடிகளார், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் அரு ளாசியுரை வழங்கவுள்ளனர். மாலையில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம் பல அடிகளார் விழாப் பேருரையாற்று கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நிறைவுரையாற்றுகிறார். இதையொட்டி, 127 கட்டுரைகள் வரப்பெற்றன. இவற்றை வல்லுநர் குழு வினர் மதிப்பீடு செய்து, 4 தலைப்பு களில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு ஒவ்வொரு தலைப்பிலும் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 4 ஆயி ரம், மூன்றாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், நான்காம் பரிசாக ரூபாய் ஆயிரம் என மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், அனைத் திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் செ. துரைசாமி, மாநாட்டுப் பொருளாளர் இல.மணி ஆகியோர் உடனிருந்தனர்.