districts

img

தமிழ்ப் பல்கலை. மாணவர்களுக்கு ரூ.15.86 லட்சம் கல்வி உதவித்தொகை

அறக்கட்டளைக்கு பாராட்டு

தஞ்சாவூர், ஏப்.23 -  

   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் ஏழை, எளிய  மாணவர்களின் கல்விக்குப் பெருமள வில் நிதியுதவி செய்து வரும் வள்ளல்  அழகப்பா செட்டியாரின் பெயர்த்தி யான அலமேலு அம்மாள் அறக்கட்ட ளைக்கு நன்றியறிவிப்பு நிகழ்வு பல்கலைக்கழகத்தின் மொழிப்புல அவையத்தில் பல்கலை. பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் தலைமை யில் நடைபெற்றது.  

  அப்போது அவர் பேசுகையில், “அலமேலு அம்மாள் அறக்கட்டளை சார்பாக, தமிழ்ப் பல்கலைக்கழக மாண வர்களிடத்தில் 172 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்கள் அனைவரின் விண்ணப்பங்களும் உரிய குழுவால்  ஆய்வு செய்யப்பட்டு, அனைவருக்கும்  ரூ.15,86,309  நேரடியாக மாணவர்க ளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டது.  

   இதில் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தின் மொழிப்புலத்தில் உள்ள இலக்கியத்துறை மாணவர்களுக்கு ரூ.3,25,303, மொழியியல் துறை மாண வர்களுக்கு ரூ.1,16,675, மெய்யியல் துறை மாணவர்களுக்கு ரூ.1,14,466, இ ந்திய மொழியியல் மற்றும் ஒப்பிலக் கியப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5,922, கலைப்புலத்தில் உள்ள சிற்பத்துறை மாணவர்களுக்கு ரூ.61,757, நாடகத் துறை மாணவர்களுக்கு ரூ.1,31,903, சுவடிப் புலத்தில் உள்ள கல்வெட்டி யல் மற்றும் தொல்லியல் துறை மாண வர்களுக்கு ரூ.1,8,51, கடல்சார் வர லாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மாணவர்களுக்கு ரூ.5,51,002, வளர்தமிழ்ப் புலத்தில் உள்ள அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை மாண வர்களுக்கு ரூ.47,556.

   அகராதியியல் துறை மாணவர் களுக்கு ரூ.37,895, அறிவியல் புலத்தில்  உள்ள சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல்துறை மாணவர்களுக்கு ரூ.85,776 என உரியமுறையில் பிரித்து  வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.  

   சிறப்பு விருந்தினராக அறக்கட்ட ளையின் நிறுவனர் அலமேலு அம்மாள், அவரது தந்தையார் வெங்க டாசலம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்காப்பியர் இருக்கைக்கான தகைசால் பேராசிரியர் தமிழறிஞர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், இலக்கியத் துறைத் தலைவர் முனை வர் பெ.இளையாப்பிள்ளை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.  

   நிதியுதவி பெற்ற மாணவர்களின் சார்பாக ஒருங்கிணைந்த முதுகலை இரண் டாமாண்டு பயிலும் மாணவி செ.ச. நிவேதா, முதுகலைத் தமிழ் இரண்டா மாண்டு மாணவர்களான இரா.தமிழ்மதி, சீ.ஆனந்தன், து.தர்ஷினி ஆகி யோர் நன்றி தெரிவித்தனர்.  

   இலக்கியத் துறை முனைவர் ஜெ. தேவி நன்றி கூறினார். சிலம்பாட்டப்  பயிற்றுநர் முனைவர் ப.செந்தில்முரு கன் தொகுத்து வழங்கினார்.