தமிழ்ப் பல்கலை.யில் நாடகப் போட்டி: ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி முதலிடம்
தஞ்சாவூர், நவ.13- தமிழ்ப் பல்கலைக்கழகம், செஞ்சுருள் சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து, தஞ்சா வூர் மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகப் போட்டியை, இளைஞர் திருவிழாவாக நடத்தின. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பல்கலைக் கழகப் பதிவாளர் (பொ) பெ.இளையா பிள்ளை வாழ்த்திப் பேசினார். பொறியாளர் சு.வைத்தியநாதன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி துணை இயக்குநர் (காசநோய்) மரு.த.மாதவி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாடகப் போட்டி இதைத் தொடர்ந்து செஞ்சுருள் சங்கம் சார்பாக, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகப் போட்டி நடைபெற்றது. இதில் ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி, வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவர்கள், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருவையாறு அந்தோணி அம்மாள் சமுதாயக் கல்லூரி என தஞ்சா வூர் மாவட்டத்திலுள்ள பல கல்லூரிகள், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாண வர்கள் பங்கேற்றனர். ஒரத்தநாடு முதல் பரிசு இந்நாடகப் போட்டியில் ஒரத்தநாடு அரசுக் கலைக் கல்லூரிக்கு முதல் பரிசும், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி மாணவர்களுக்கு இரண்டாம் பரிசும், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் திற்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. பேராசிரியர் சி.வீரமணி, ஏகம் பவுண்டே சன் பொது மேலாளர் க.சண்முகம், வெங்க டேஸ்வரா கல்வி மற்றும் கிராம வளர்ச்சி அறக்கட்டளை, நிர்வாக இயக்குநர் க.பாஸ் கரன் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். முன்னதாக செஞ்சுருள் சங்கம் ஒருங்கி ணைப்பாளர் செ.த.ஜாக்குலின் வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம், மாவட்ட திட்ட மேலாளர் (பொ) ஜெனிபர் அருள்மேரி நன்றி கூறினார்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை, நவ.13- காவிரி - வைகை - குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின்கீழ் நிலமெடுப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, கட்டளை கதவணையை இணைப்பு கால்வாய் பிரியும் இடத்தில் காவிரியில் ரூ.165 கோடி யில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 9.2.2009 அன்று துவங்கப்பட்டு முடிக்கப்பட் டது. இத்திட்டம், தெற்கு வெள்ளாறு வரை வெள்ளநீர் இணைப்பு கால்வாயாக செயல் படுத்த திட்டமிட்டு ரூ.6941 கோடிக்கு கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் பட்டா நிலங்களும், திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 572.56 ஹெக்டேர் பட்டா நிலங்களும் தேவைப் பட்டன. நிலமெடுப்பு பணிகளுக்கு ரூ.866 .86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 601.15 ஹெக் டேர் பரப்பு நிலங்கள் கையகப்படுத்தப்பட் டுள்ளன. முதல் பகுதி பணிக்கு ரூ.90.60 கோடியும், இரண்டாம் பகுதி பணிக்கு ரூ.108.66 கோடியும் செலவினம் மேற்கொள்ளப்பட்டு 78 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2023-24 இல் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு ரூ.111.52 கோடி ஒதுக்கீடு செய்து, இந்த நிதியாண்டி லேயே பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்ட பணிகளுக்காக 21 கிராமங்களில் 441. 95.24 ஹெக்டேர் பட்டா நிலங்கள் மற்றும் 143.09.86 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 585.05.01 ஹெக்டேர் நிலங்கள் கையகம் செய்யப்பட உள்ளது” என்றார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யா தேவி, செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) சிவக்குமார், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சி யர் தெய்வநாயகி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
மழை வெள்ள பாதிப்பை தடுக்க 1200 மணல் மூட்டைகள் தயார்
செம்பனார்கோவில் ஆணையர் தகவல் மயிலாடுதுறை, நவ.13 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியத்தில் மழை வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த 1200 மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாக ஒன்றிய ஆணையர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் 57 ஊராட்சி களிலும் வடகிழக்குப் பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஊராட்சிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், வாய்க் கால் மற்றும் சிறிய மதகுகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் சூழ்வதை தடுப்பது குறித்தும் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஆகி யோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஒன்றிய ஆணையர் கூறுகை யில், வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மழை-வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1200 மணல் மூட்டை களை தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும் கடற்கரை கிராமங்களில் புயல் பாது காப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
தீபாவளி பண்டிகையால் குவிந்த 150 டன் குப்பைகள் அகற்றம்
தஞ்சாவூர், நவ.13 - தஞ்சாவூர் மாநகரில் தீபாவளி பண்டி கையையொட்டி கடைவீதிகள் மற்றும் தெருக்களில் குவிந்த குப்பைகள், திங்கள் கிழமை ஒரே நாளில் மட்டும் 150 டன் அகற்றப்பட்டன. இந்த பணியில் 600 பணி யாளர்கள் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகளில் 54 ஆயிரம் வீடுகள் உள்ளன. மேலும் மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக் கான கடைகள், நூற்றுக்கணக்கான உண வகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் உள்ளன. இதிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு, ஜெப மாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கு மற்றும் வார்டுகளில் ஆங்காங்கே நுண் ணுரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுவது வழக்கம். மாநகராட்சியில் தினமும் 90 முதல் 100 டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை யையொட்டி தஞ்சாவூர் மாநகரில் காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, அண்ணா சாலை, தெற்கு அலங்கம், கீழ அலங்கம், தெற்கு வீதி, கீழராஜவீதி, திலகர் திடல், ரயிலடி ஆகிய பகுதிகளில் ஏராள மான தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட் டிருந்தன. இந்த கடைகளில் கடந்த நவ.11 அன்று காலை முதல் நவ.12 அதிகாலை வரை, அதிகளவிலான மக்கள் தங்க ளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். தீபாவளி வியாபாரம் முடிந்த தும், இந்தப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் வழக்கத்தைவிட அதிகமாக தேங்கி கிடந்தன. மாநகராட்சி தூய்மைப் பணியா ளர்கள் 600 பேர் திங்கள்கிழமை அதி காலை 5 மணி முதல் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் லாரிகள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் என 60 வாக னங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் சுமார் 150 டன் குப்பைகள் அகற்றப் பட்டன.
பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா கோரிக்கை
பாபநாசம், நவ.13- விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற் கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக் கையில், “சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காவிரியில் நீர் வரத்து இல்லாததாலும், பருவமழைப் பொழிவு போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தாலும், பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தாமதமாக தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பெரும்பாலான இணையச் சேவை மையங்களில் கணினி இணைய சேவை சுணக்க நிலையில் உள்ளது. இந்நிலையில், அரசு அறிவித்துள்ள நவ.15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறுகிய கால அவகாசமாக உள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, சம்பா பரு வத்தில் காப்பீடு செய்த விவசாய நிலங்க ளுக்கு, பாதிப்பின் அடிப்படையில் முறை யாகக் காப்பீடு தொகை வழங்கப்பட வில்லை என்ற கருத்து விவசாயிகளிடையே இருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் ஏற்படா மல் இருக்க, காப்பீடு விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள் கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து சிறுவன் தப்பியோட்டம்
தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மணிமண்ட பம் அருகே தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குற்றச் சம்ப வங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களை அடைப்பதற்கான அரசு கூர் நோக்கு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் இரு சிறுவர்கள் அடைக்கப்பட்டி ருந்தனர். இந்நிலையில், ஞாயிற் றுக்கிழமை காலைக் கடன் களுக்காக இருவரும் கழிப் பறைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இவர்களில் தஞ்சா வூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்டவ ரும், வல்லம் காவல் நிலை யத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப் பட்டவருமான 17 வயது சிறு வன் சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து இல்ல அலு வலர்கள் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் பேரில் காவல் துறை யினர் அந்த சிறுவனைத் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மயிலாடுதுறை, நவ.13- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் கன மழை எச்சரிக்கை காரண மாக செவ்வாயன்று மயி லாடுதுறை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி-கல்லூரி களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறி வித்துள்ளார்.