தஞ்சாவூர், ஜன.7- தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உரு வாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், இன்பென்ட் நடனப்பள்ளி தர வகுப்புகள் மற்றும் சான்றி தழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. VCYDT அறக்கட்டளையின் கீழ் இயங் கும் இன்பென்ட் நடனப்பள்ளி நான்கு வயது முதல் 14 வயது வரையிலாக மொத்தம் 400 மாணவர்களை கொண்டு இயங்குகிறது. மேலும் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழ் இலக்கியப் பாடல்களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு நாடு களில் அரங்கேற்றி வருகிறது. இவ்வகை யில் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், இன்பென்ட் நடனப் பள்ளி இயக்குநர் ஆகியோர் இப்புரிந்து ணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் செ. கற்பகம், இணை இயக்குநர், கண்காணிப்பா ளர் பஞ்சநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.