districts

தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 10- தமிழ்நாடுஅரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  1.1.2022ஆம் நாளன்று 58 வயது  நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டுவருவாய் ரூ.72,000-க்குள் இருக்கவேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றிவருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம்  பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.  இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ இலவச மாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும்.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்  அலு வலகத்தில் 31.3.2023-க்குள் அளிக்க  வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார்  தெரிவித்துள்ளார். 

;