சின்னாளப்பட்டி, அக்.25- 17 வயதுக்குட்பட்டோருக்கான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, அந்தமான் ஆகிய 7 மாநிலங்கள் பங்கேற்ற 4-ஆவது தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக் கான ரோல்பால் போட்டிகள் புதுச்சேரியில் அக்டோபர் 21, 22 ஆகிய தேதி களில் நடைபெற்றது. இதில், மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் அணி தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொண்டது. இதன் பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக அணியும், கேரள அணியும் மோதின. இதில் தமிழக அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. இதேபோல், ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கேரளா அணியும், தமிழக அணியும் மோதின. இதில் கேரளா அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. இந்நிலையில், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாஸ்டர் பிரேம்நாத், பயிற்சியா ளர்கள் தங்கலட்சுமி, கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டினர்.