திருச்சிராப்பள்ளி, பிப்.1- தமிழ்நாடு அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி, திருச்சி கே.கே. நகரில் உள்ள சாய்ஜி ரோல் பால் பயிற்சி மைதானத்தில் சனி, ஞாயிறு 2 நாட்கள் நடக்கிறது. இதில் திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், தேனி உள்பட 20 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500 மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர். போட்டியின் முதல் நாளான சனிக்கிழமை அன்று 3 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியை, தமிழ்நாடு அமெச்சூர் ஸ்பீட் ரோலர் ஸ்கேட்டிங் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.பி சுப்பிரமணியம், தலைவர் சரவணன், வேலம்மாள்பள்ளி முதல்வர் சுதா நவீன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் 300, 500, 1000 மீட்டர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ஈஸ்வரி குரூப் ஆஃப் கம்பெனி சேர்மன் கே.டி. சிவசண்முகம், ஜெயப்பிரியா குரூப் இயக்குனர் தினேஷ், செயலாளர் மணிகண்டன், துணைத் தலைவர் ராபின், சாய்ஜி ஸ்கேட்டிங் அகடாமி பயிற்சியாளர்கள் கோவிந்தராஜ், காயத்ரி, தமிழ்நாடு அமெச்சூர் ஸ்பீட் ரோலர் ஸ்கேட்டிங் செயலாளர்கள் புதுகோட்டை சுப்புராஜ், அஜித், கடலூர் சிவக்குமார், திருவாரூர் லோகநாதன் ஆகியோர் பதங்கங்கள் வழங்கி பாராட்டினர். போட்டியில் டெக்னிக்கல் தலைமை பிரேம்நாத், பயிற்சியாளர்கள் திருநாவுக்கரசு, அரவிந்த், செந்தில், அருண் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.