பொன்னமராவதி அருகே சேரனூர் ஊராட்சி கைவேலிப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார். இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம், வட்டாட்சியர் ஜெயபாரதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.