districts

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் தமிழக அரசு அறிக்கை

தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி, ஜூன் 9-

     முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திருச்சி ராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார்.

     முன்னதாக முதல்வர் தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில், இவ்வாண்டு காவிரி பாசனப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு. தூர்வாரும் பணிகள் குறித்த குறும்படத்தை பார்வையிட்டார்.

      அதன் அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

     2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், நீர்வளத்துறையின் மூலம் கால்வாய்கள் சீரமைப்பு. ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித் தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் உழவர்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள். வாய்க்கால்கள். வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

     அதன்படி, 2023-24ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மண்டலத்தை சார்ந்த பாசன ஆதாரங்களில் தூர்வாரப்படும் பணிகளின் விவரம்.

     சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 31 பணிகள்

     நாமக்கல் மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஐந்து பணிகள். ண ண திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ.15.88 கோடி மதிப்பீட்டில் 100 பணிகள்.  ண கரூர் மாவட்டத்தில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் 38 பணிகள். T   

     அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 13 பணிகள்.  

     பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் 39 பணிகள்.

      தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.20.45 கோடி மதிப்பீட்டில் 189 பணிகள்.

      திருவாரூர் மாவட்டத்தில் ரூ.12.83 கோடி மதிப்பீட்டில் 111 பணிகள்.  

     நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 ப ணிகள்.  

     மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.06 கோடி மதிப்பீட்டில் 51 பணிகள்,   

     புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.2.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 பணிகள்.  

     கடலூர் மாவட்டத்தில் 10.00 கோடி மதிப்பீட்டில் 55 பணிகள்.

  என மொத்தம் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4773.13 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 691 பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.