மயிலாடுதுறை, ஜூன் 29 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் எஸ்.ஏ.என் மாஸ் மஹாலில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட 30 ஆவது மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர்கள் ஏ.ரவிச்சந்திரன், சி.விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், டி.ஜி.ரவி, அசோகன், கேசவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 32 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டு தலைவராக டி. சிம்சன், வரவேற்பு குழு செயலாளராக கே.பி. மார்க்ஸ், பொருளாளராக யூ.சண்முகம், துணைத் தலைவர்களாக 8 பேரும், துணைச் செயலாளர்களாக 8 பேரும் தேர்வு செய்யப்பட் டனர். செம்பனார்கோவில் ஒன்றிய துணை செயலாளர் எம்.சுதாமன் நன்றி கூறினார்.