கே.பாலபாரதி பேச்சு புதுக்கோட்டை, செப்.28- எளிய மக்களின் வாழ்வு மேம் பட தமிழ்நாடு வங்கி உரு வாக்கப்பட வேண்டும் என்றார் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாலபாரதி. புதுக்கோட்டை மாவட்ட கூட்டு றவு வங்கி ஊழியர் சங்கத்தின் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டை யில் வியாழக்கிழமை நடை பெற்றது. பேரவையை வாழ்த்தி அவர் பேசியதாவது: சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமின்றி கூட்டுறவு சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் செயல்படு வோம் என இந்தப் பேரவை அறிக் கையில் எழுதி வைத்துள்ளீர்கள். இது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் முக்கிய மான அம்சமாகும். ‘தமிழ்நாடு வங்கி’ உரு வாக்கப்பட வேண்டும் என இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது. இது வரவேற்கப்பட வேண் டிய முக்கியமான தீர்மானம். இந்தி யாவிலேயே மாநிலக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து கேரள அரசு ‘கேரள வங்கி’யை உரு வாக்கியுள்ளது. அதன் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அந்த அரசு அமல்படுத்தி வருகிறது. வெளி நாட்டு முதலீட்டுகளையும் அந்த வங்கி ஈர்த்து மிகப்பெரிய சாத னைகளைப் படைத்து வருகிறது. மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வரு கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கி களை இணைந்து தமிழ்நாடு வங்கி யை உருவாக்குவது மிகவும் அவ சியம். அரசு இதை நிறைவேற்ற வேண்டுமென்றார். பேரவைக்கு மாவட்டத் தலை வர் கே.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.ஜெயபாலன், மாவட்ட நிர்வாகிகள் டி.திருப்பதி, பொருளாளர் ஆர்.கருப்பையா ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி பி.சந்திரகுமார், பி. அர்சத் அப்துல்லா, எம்.ராஜகேசி, டி.சுப்பிரமணியன், டி.ரகுமான், கே.கோவிந்தராசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநிலத் தலைவர் தி.தமிழரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக எம்.கோவிந்தராசு வரவேற்றார். எம்.முரளிதரன் நன்றி கூறினார்.