தஞ்சாவூர், ஜூன் 29-
தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில், இந்திய ஆட்சிப் பணியில் 2021- ஆம் ஆண்டு பணிநியமனம் பெற்ற உதவி ஆட்சி யர்கள் 13 பேருக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளியும் தமிழக அரசு, மனிதவள மேலாண்மைத் துறையும் இணைந்து, சிறப்புத் தமிழ்ப் பயிற்சி வழங்கி வருகிறது.
ஜூன் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியின் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை காலை பல்க லைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அறிமுகக் கூட்டத்தில் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (பயிற்சி), பதிவாளர், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் லக்னோ, இந்தூர், பாட்னா, ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த, இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் (பயிற்சி) தமிழில் பேசவும், எழுதவும் வாசிப்பதற்குமான மொழிப் பயிற்சி வழங்கப்படுகிறது.
அதற்கு உதவும் வகையில் இப்பயிற்சியில் அவர்களுக்கு அடிப்படை இலக்கணம், எழுத்துப் பயிற்சி, எடுத்துக்கூறல், மொழி பெயர்ப்பு, கையெழுத்துப் படியை வாசிக்கும் பயிற்சி, உரையாடல், குறிப்புக்கள் எடுத்தல், சொற்கள் தொடர்களை அமைத்தல், நிர்வாக வியல் கலைச்சொற்கள், கட்டுரைகள் எழுதுதல் முதலிய மொழித்திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இப்பயிற்சியில் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்ட உதவி ஆட்சி யர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
இப்பயிற்சியின் இயக்குநர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கி யப் பள்ளியின் பேராசிரியர், தலைவர் ச.கவிதா இதனை ஒருங்கி ணைத்தார். தமிழ் மொழி கற்பித்தலில் அனுபவமிக்க மூத்த பேராசிரி யர்கள் கி.அரங்கன், இரா.முரளிதரன், க.இரவிசங்கர் மற்றும் ச.கவிதா ஆகியோர் இப்பயிற்சியை வழங்குகின்றனர்.