districts

img

கும்பகோணத்தில் தமிழ் வளர்ச்சி நாள் பொதுக்கூட்டம்

கும்பகோணம், நவ.3- தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி  நாள் பொதுக் கூட்டம் கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் நடை பெற்றது. கும்பகோணம் அருகே  தாராசுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு  மாநகரச் செயலாளர் கா. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் ஆர்.செல்வம் வரவேற்றார். ஒன்றியச் செய லாளர் கணேசன் முன்னிலை வகித்தார் .மாநில செயற்குழு உறுப்பினர் கே கனக ராஜ், மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், சி.ஜெயபால் அருள ரசன், மாவட்டக்குழு உறுப்பினர் கலைச் செல்வி, சரவணன், நாகராஜ் ஆகியோர் பேசினர். மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.வி. மணி நன்றி கூறினார்.