districts

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப் பெறுக!

அரியலூர், ஜன.23 - புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூர் அஞ்சல் நிலையம் முன்பு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தி னர் (சிஐடியு) செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் எம். சந்தானம் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டத் தலை வர் கே.கிருஷ்ணன், மாவட் டச் செயலாளர் பி.துரை சாமி, துணைத் தலைவர் ஆர். சிற்றம்பலம், அரசு போக்கு வரத்து கழகம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் கண்டன உரையாற்றினர்.  ஹிட் மற்றும் ரன் வழக்கில் ஓட்டுநர்களுக்கு 10  ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.7 லட்சம் அபராதம் விதிக் கும் சட்டம், ஆன்-லைன் அப ராதச் சட்டம் உள்ளிட்ட சட்டங் களை திரும்பப் பெற  வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.