பொன்னமராவதி, ஜன.21- புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி ஸ்ரீ பொய்சொல்லா மெய்யர் அய்யனார் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள் ளது. கிராமமக்களின் கோரிக்கையை ஏற்று, இக்கோவிலை பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறுகையில், மூலங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவிலை உடனடியாக அறநிலையத்துறை ஏற்று நடத்த வேண்டும்.கோவிலுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக பட்டா போட்டு விற்ற நபர்கள் மீது சட்ட நடவ டிக்கை எடுத்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும். பூர்வகுடி மக்களான தேவேந்திர குல வேளாளர் மக்க ளுக்கு கோவிலில் ஒரு நாள் மண்ட கப்படி வேண்டும்.சுயமரியாதையாக அந்த மக்கள் பயன்படுத்திய அதே இடத்தில் அன்னதானம் நடத்த இடை யூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து அதே இடத்தில் அன்னதானம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு சமூக மக்களுக்கும் கோவிலின் அருகே மண்டபம் உள்ள நிலையில் தேவேந்திர குல வேளாளர் மக்களும் மண்டபம் கட்டிக் கொள்ள உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளை தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் வருட வரவு-செலவு கணக்குகளை அனைத்து சமூக மக்க ளையும் ஒருங்கிணைத்து அதில் சமர்ப் பிக்க வேண்டும்.இக் கோரிக்கைகள் மீது உரிய தலையீடு செய்து அற நிலையத்துறை உடனடியாக நிறை வேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்து கிறேன் என்று தெரிவித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணன், ஒன்றிய செயலாளர் பக்ருதீன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலை வர் ஜீவானந்தம், மாவட்ட துணைத் தலைவர் நல்லதம்பி, கட்சியின் கிளைச் செயலாளர் நல்லம்மாள், தேவேந்திர குல வேளாளர்( குடும்பர்) சமூகத்தைச் சேர்ந்த ஏழு சாமியா டிகள், பொதுமக்கள்,ராசு உள்ளிட் டோர் உடனிருந்தனர்.