districts

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவாக பேசும் ஒப்பந்த நிறுவன மேலாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக!

சிஐடியு வலியுறுத்தல் கும்பகோணம், மார்ச் 6 - கும்பகோணம் மாநகராட்சி  துப்புரவு பெண் தொழிலாளர்களை  இழிவாக பேசும் ஒப்பந்த நிறுவன  (சரண் என்விரான்மென்ட்) மேலாளர் மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தெரி வித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் மாநகராட்சியில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட தூய்மை காவலர் கள், துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி  வருகிறார்கள்.  இவர்களுக்கு சிஐ டியு முன்முயற்சியால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், துப்பு ரவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.590 கொடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கும்பகோணம் மாநக ராட்சியுடன் ஒப்பந்தம் செய்த நிறு வனமான சரண் என்விரான்மென்ட் நிறுவனம், உரிய கூலியை கொடுக் காமல் காலம் தாழ்த்தி குறைந்த கூலியை கொடுத்து வந்துள்ளது. இதனை கண்டித்து பலமுறை அதி காரிகளிடமும் சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்களிடம் சிஐடியு சார்பில் எழுத்து மூலமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் செவி சாய்க்கா மல் அந்நிறுவன மேலாளர் மோகன், துப்புரவுத் தொழிலாளர்களை தரக்  குறைவாகவும் பெண்களை இழிவு படுத்தியும் பணிச்சுமையை அதிகப் படுத்தியும் மிரட்டல் எண்ணத்தோடு  பேசி வருகிறார். இதை மீறி தொழி லாளர்கள் தங்களின் உரிமையை கேட்டால் வேலையில் இருந்து நீக்கப் படுவார்கள் என எச்சரிக்கை விடுக் கிறார். இது தொழிலாளர்களை நசுக்கும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.  கும்பகோணம் மாநக ராட்சி துப்புரவுப் பணிகள் மேற் கொள்வதற்கு ஒப்பந்தம் செய்தி ருக்கும் நிறுவன உரிமையாளர், சிஐடியு தலைவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு  சம்பளத்தையும் ஒப்பந்த நிறுவன மேலாளர் வழங்க வேண்டும். ஒப்பந்த நிறுவன மேலாளரின் அத்து மீறிய பேச்சிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.