மயிலாடுதுறை, மார்ச் 4- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறை நகராட்சிக்குட்பட்ட வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம், மாவட்ட பத்திர பதிவு துறை அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதி, பிற் படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவியர் விடுதி, தர்மபுரம் ஞானாம்பிகை அரசினர் கல்லூரி மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளையும், மணக்குடியில் 24 கோடி செலவில் புதிய பேருந்து நிலைய பணி களையும், மன்னம்பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114 கோடி செலவில் நடைபெற்று வரும் புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலக கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மயிலாடுதுறை வரு வாய் கோட்டாட்சியர் செல்வி வ.யுரேகா, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.