திருச்சிராப்பள்ளி, டிச.27 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மேயர் அன்பழகன் சுகாதார பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் மீன் கழிவுகளை சாலை மற்றும் ஆற்றங்கரை வெளிப்பகுதியில் கொட்டினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்பதை உடனடியாக சரி செய்ய உத்தர விட்டார். மீன் மார்க்கெட்டை தினமும் தூய்மைப்படுத்த வேண்டும். அதோடு மாநகராட்சி குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும். வெளிப்புறங்களில் மீன் கடை கள் போடுவதை நிறுத்த வேண்டும் என்று கடைக்காரர் களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற் பொறியாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மாமன்ற உறுப்பி னர்கள், சுகாதார அலுவலர், ஆய்வாளர் கலந்து கொண்டனர்.