districts

img

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: திருவாரூரில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மார்ச் 11- தில்லியில் போராடும் விவசாயி களுக்கு ஆதரவாகவும், தில்லி ராம் லீலா மைதானத்தில் மார்ச் 14  அன்று மகா பஞ்சாயத்து நடைபெற  உள்ளது. அதைப் பிரகடனப்படுத் தும் வகையிலும் தமிழ்நாட்டில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, திருவா ரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய மையங்களில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி (SKM), சிஐடியு,  ஏஐடியுசி மற்றும் விவசாயத் தொழி லாளர்கள் உள்ளிட்ட வெகுஜன அரங்கங்கள் சார்பில் விவசாயி களின் கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி திங்களன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர் புதிய ரயில் நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர்  கே.ஆர்.ஜோசப் ஆகியோர் தலைமை வகித்து உரையாற்றினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.கந்தசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோமதி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். திருவா ரூர், கொரடாச்சேரி, வலங்கை மான், நன்னிலம் மற்றும் குட வாசல், கூத்தாநல்லூர் ஆகிய ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். திருத்துறைப்பூண்டி  திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட  துணைத் தலைவர் கே.உலக நாதன், எஸ்.சாமிநாதன் ஆகியோர்  தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கே.சுஜாதா மற்றும் பலர் கண்டன உரையாற்றினார். இதில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தெற்கு, வடக்கு, நகரம்  மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய, நகரத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி  மன்னார்குடி தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய  விவசாய முன்னணி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பி.எஸ்.மாசிலா மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி  ஆகியோர் தலைமை வகித்தனர்.  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ், தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் மாவட்ட துணைத்  தலைவர் ராவணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகு பதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மன்னார்குடி ஒன்றியம், நகரம், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்தோர்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தில்லியில் நடைபெறும் விவ சாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு  தெரிவித்தும், காவல்துறையின ரால் சுட்டுக் கொல்லப்பட்ட விவ சாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கு களை திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கம் எழுப்பினர்.