மயிலாடுதுறை, ஜூலை 8 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி தலைமையில் நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 369 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 68 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 79 மனுக் களும், முதியோர், மாற்றுத்திற னாளிகள், மற்றும் விதவை உதவித்தொகை கோரி 47 மனுக் களும், புகார் தொடர்பான மனுக்கள் 38 மாற்றுத்திறனாளி கள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திற னாளி உபகரணங்கள் கோரி 23 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 18 மனுக்களும், நில அபகரிப்பு தொடர்பாக 29 மனுக்களும் கலை ஞர் உரிமைத்தொகை வேண்டி 39 மனுக்க ளும் தொழிற்கடன் வழங்க கோரி 27 மனுக்க ளும் என மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5900 என மொத்தம் ரூ.29,500 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.