புதுக்கோட்டை, பிப்.12 - தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரி யத்தின் சார்பில் மண்பாண்டத் தொழிலா ளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா செவ்வாய்க் கிழமை வழங்கினார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழி லாளர்களின் இன்னல்களை போக்கிட அவர்களின் குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5,000 மழைக்கால பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன டிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 358 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.17.90 லட்சம் மதிப்பீட்டில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் 19 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு ரூ.21,420 மதிப்பிலான விலையில்லா மின்விசை சக்கர இயந்தி ரங்கள் ரூ.4.07 லட்சம் மதிப்பீட்டில் செவ்வா யன்று வழங்கப்பட்டுள்ளன” என்றார். இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர்-திருச்சி கதர் கிராமத் தொழில்கள் வி.வி.ரவிக் குமார், மேலாளர் திருமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.