புதுக்கோட்டை, ஜூலை 5-
வேளாண்மை பொறி யியல் துறை வாயிலாக சிறு, குறு விவசாயிகளின் உழவு பணிக்கு டிராக்டருடன் இயங்கக்கூடிய கலப்பை, ரோட்டவேட்டர் போன்ற கருவி, 50 சதவீத மானிய வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புதுக் கோட்டை ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கூறுகையில், உழுவை வாடகைத் திட்டத் தின்கீழ் ஒரு மணிநேரத்திற்கு வாடகை ரூ.500 வீதம், ‘இ- வாடகை’ செயலி வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப் படுகிறது. மேலும், சிறு-குறு விவசாயிகளுக்கும், ஆதி திராவிடர் விவசாயி களுக்கும் அதிகபட்சமாக 5 மணிநேரத்திற்கு மட்டும் ரூ. 1250 (புன்செய் நிலங்கள்), ரூ.625 (நன்செய் நிலங்கள்) பின்னேற்பு உழவு மானிய மாக மணிக்கு ரூ.250 என்ற விகிதத்தில் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படு கிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், இ-வா டகை செயலியில், சிறு விவ சாயி சான்று அல்லது பி.எம். கிசான் திட்டத்தில் பயன் பெற்று வருவதற்கான சான்று அல்லது நுண்ணீர் பாசன திட்டத்தில் பாசன கருவிகள் பெற்றதற்கான வழங்கல் ஆணையை பதி வேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். வேளாண் பொறியியல் துறை அலுவ லகங்களான உதவி செயற் பொறியாளர் (வே.பொ), திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம், புதுக் கோட்டை, கைபேசி எண் 99944 05285, என்ற அலுவல கத்தையும், உதவி செயற் பொறியாளர் (வே.பொ), நைனா முகமது கல்லூரி அருகில், இராஜேந்திரபுரம், அறந்தாங்கி, கைபேசி எண் 91593 84364 என்ற அலுவல கத்தையும், செயற்பொறி யாளர் (வே.பொ), திருச்சி மெயின்ரோடு, திருக்கோ கர்ணம், புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 என்ற அலுவலகத் தையும் அணுகி பயன்பெற லாம் என்றார்.