திருப்பூர், ஜூலை 1-
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத் தில் நடைபெற்ற சூரியகாந்தி ஏலத்தில் ரூ.6,32,279க்கு வணி கம் நடைபெற்றது.
இந்த ஒழுங்கு முறை விற் பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப் பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் 24 பேர் கலந்து கொண்டு 13, 767 கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். இதில் முத்தூர், வெள்ளகோ வில், காங்கேயம், ஈரோடு பகு தியை சேர்ந்த 5 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரி யகாந்தி விதையை அதிகபட்சமாக ரூ.49.69க்கும், குறைந்தபட்சம் ரூ. 41.49க்கும் கொள்முதல் செய்த னர். நேற்று மொத்தம் ரூ.6, 32, 279க்கு வணிகம் நடைபெற்றது என வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப் பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித் துள்ளார்.