districts

மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான கூட்டம்

புதுக்கோட்டை, ஆக.27 -

      புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்திற்கு வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பள்ளி செல்லா மாற்றுத்  திறன் மாணவர்களை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண் டும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதை பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், ராஜேஸ்வரி இயன் முறை மருத்துவர் சரண்யா, இல்லம் தேடிக் கல்வி மைய ஒருங் கிணைப்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.