மயிலாடுதுறை, மே 6-
மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மையத்தில் கடந்த பல ஆண்டு களாக செயல்பட்டுவந்த பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் கைப்பந்து பயிற்சி மையத்தை உத்தரப்பிரதேசம் மாநிலம் வார ணாசிக்கு ஒன்றிய பாஜக அரசு மாற்றிய நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங் களை நடத்தியது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன் இதற்கு கண்டனம் தெரி வித்ததோடு, விளையாட்டு மையத்தை மீண்டும் மயிலாடுதுறைக்கே கொண்டுவர வேண்டுமென இந்திய விளையாட்டு ஆணை யத்துக்கு கோரிக்கை விடுத்தார். இதைய டுத்து பெண்களுக்கான கூடைப்பந்து, கைப்பந்து மையம் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாலிபர் சங்கத்தின் மயி லாடுதுறை மாவட்டச் செயலாளர் அறிவழ கன், மாவட்டத் தலைவர் ஐயப்பன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடனடியாக கண்டன குரல் எழுப்பி விளை யாட்டு ஆணையத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து மீண்டும் பயிற்சி மையத்தை மயிலாடுதுறைக்கே கொண்டு வந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துள்ள னர்.