புதுக்கோட்டை, ஜூன் 16-
புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம் வீதியை சேர்ந்த ரவி (எ)மாணிக்கம்-விசாலாட்சி தம்பதியரின் மகன் வைத்திய நாதன்.
வைத்தியநாதன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உள்ள சிஞ்சோவ் மாகாணத்தில் செயல்படும் சிஞ்சோங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பிற்காக சேர்த்துள்ளார். 4-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்த நிலையில், அங்குள்ள நீச்சல் குளத்திற்கு வெள்ளிக்கிழமை சக மாணவர்களோடு சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார்.
அங்கு வைத்தியநாதன் மட்டும் குளித்துக் கொண்டி ருந்தபோது குளத்தில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து வெளியேற்றும் கருவியை நீச்சல் குள நிர்வாகம் இயக்கிய தாகக் கூறப்படுகிறது. இதில் இழுத்துச் செல்லப்பட்டு அந்த சுத்திகரிப்பு இயந்திரத்தில் சிக்கி வைத்தியநாதன் உயிரி ழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த சக மருத்துவ மாணவர்கள் வைத்திய நாதனின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு மாணவர் வைத்தியநாதனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து, செய்வதறியாமல் மீளா துயரில் தவித்து வருகின்றனர்.