மயிலாடுதுறை, பிப்.22- மயிலாடுதுறை டபீர் தெருவில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் (பழங்காவிரியோரமுள்ள மேல்நிலைப் பள்ளியின் இணைப்பு கட்டிடம்) துணைக் கட்டிடத்தில் 6 முதல் 10 வகுப்பு வரையி லான 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்திரா காலணி தெரு வழியாக செல்லும் பாதையை பள்ளி க்கு செல்லும் பாதையாக பயன்படுத்தி வரும் நிலையில், அந்த பாதையின் இரு புறமும் குப்பைகளையும், பல்வேறு கழிவு களையும் கொட்டுவதால் கடுமையான துர்நாற்றம் வீசிவருகிறது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மூக்கை பொத்திக்கொண்டே சென்று வரும் அவலநிலை தொடர்ந்து நீடித்து வரு கிறது. மேலும் பல்வேறு நோய் தொற்று களாலும் மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்ட ஆட்சி யர் இப்பிரச்சனை சம்பந்தமாக உரிய நட வடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.