தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் தஞ்சாவூர் மாநக ராட்சி சார்பில் ‘அனைவரும் இணைவோம்; அறிவியல் அறிவோம்’ என்ற நிகழ்ச்சி கடந்த 44 நாட்களாக நடந்தது. அதன் நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் தலைமை வகித்துப் பேசி னார். அப்போது அவர் கூறுகையில், “தஞ்சை மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவர்கள் விண்வெளி பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி கடந்த 44 நாட்கள் நடைபெற்றது. இதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் கண்டு களித்துள்ளனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 47 மாணவர்கள் இஸ்ரோ அழைத்து செல்லப்பட உள்ளனர். பெற் றோர், பிள்ளைகள் விரும்பும் பாடத்தை படிக்க அனுமதியுங்கள்” என்றார். பின்னர் மாணவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை மேயர் வழங்கினார்.