கும்பகோணம், டிச.30 - தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) 170 கால பழமையும், பெருமையும் கொண்டது. கல்லூரி வரலாற் றில் முதல் முறையாக 2004-07 ஆம் கல்வியாண் டில் ஆங்கில இலக்கியம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு டிசம்பர் 30 (சனிக் கிழமை) அன்று கல்லூரியில் நடைபெற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத் துறையின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆங்கிலத் துறைத் தலைவர் சா. சரவணன் தலைமையேற்று நடத்தினார். முன்னாள் மாணவியும், தற்போதைய ஏவிசி கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரிய ருமான ஏ.கனிமொழி வரவேற்றார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர், தேர்வுத் துறை கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.எஸ்.சுந்தரராஜன் சிறப்புரையாற்றி னார். கல்லூரியின் முன்னாள் பேராசிரி யர்கள் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள்-மாணவர்கள் கலந்துரை யாடலுடன் தங்கள் கல்லூரி கால நினைவு களை பகிர்ந்து கொண்டனர். முன்னாள் மாண வரும், தற்போதைய ஆசிரியருமான எம்.ராஜன் நன்றி கூறினார்.