districts

img

சிஏஏ சட்டத்தை ரத்து செய்க! திருச்சியில் மாணவர் சங்கம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- ஒன்றிய பாஜக அரசு சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியாக வந்து மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்டச் செயலாளர் மோகன், விடுதி மாணவர் பொறுப்பாளர் ரஞ்சித், துணை பொறுப்பாளர் சுதேசனா அன்பு ஆகியோர் பேசினர்.