districts

ரயில் மோதி மாணவர் பலி

தூத்துக்குடி, ஆக. 17     

     தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, ஜமீன் செங்கப்படை கிரா மத்தைச் சேர்ந்தவர் முத்து ராமலிங்கம் மகன் கதிரே சன் (18). இவர் கோவில் பட்டி அரசு கலைக் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மண்ணியல் பிரிவில் படித்து வருகிறார். வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

    கல்லூரியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, மைசூர் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ  இடத்திலேயே உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி இருப்புப் பாதை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப்பதிந்து, விசா ரணை நடத்தி வருகிறார்.