திருவாரூர், செப்.1 - நீட் எதிர்ப்பு போராளி அனிதா 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் குடவாசல் எம்ஜி ஆர் அரசு கலைக்கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நடைபெற்றது. ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு காரணமாக தனது மருத்துவ படிப்பை தொடர முடியாமல் உயிர் நீத்த அனிதாவின் நினைவஞ்சலிக்கு அமைப் பின் மாவட்ட துணை செயலாளர் இரா. சூர்யா தலைமை வகித்தார். கல்லூரி கிளைச் செயலாளர் பா.ரஞ்சித், தலை வர் பி.சிவசக்தி உள்ளிட்ட பலர் பங்கேற் றனர். இதேபோல் திருவாரூர் திரு,வி,க கலைக் கல்லூரி மற்றும் நன்னிலம் பாரதிதாசன் அரசு கலைக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் தலைமையில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அரசினர் ஆடவர் கல்லூரி முன்பு நடந்தது. நீட் தேர்வால் மரணித்த அனிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாணவர் சங்க பொறுப்பா ளர்கள் பிரதீப், ராகுல், நவீன், நிக்காஸ், அலெஸ், அருண், விஜயராகவன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக் கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டு மென வலியுறுத்தினர்.