districts

img

நேசனல் கல்லூரியின் கட்டணக் கொள்ளையை தடுத்திடுக!

திருச்சிராப்பள்ளி, பிப்.12 - திருச்சி மாவட்டம் கருமண்ட பம் பகுதியில் உள்ள நேசனல் கல்லூரியில், அரசு உதவிபெறும் பாடப் பிரிவில் படிக்கக் கூடிய மாணவர்களிடம் கல்லூரி நிர்வா கம் அரசு நிர்ணயித்த கல்லூரி கட்டணத்தை புறக்கணித்து அநியாயமாக அதிகளவு கல்லூரி  கட்டணத்தை தொடர்ந்து வசூ லித்து வருகிறது.  இதனைத் தொடர்ந்து கடந்த ஜன.29 அன்று இந்திய மாணவர் சங்கத் தலைமை யில், அநியாய கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரியான நேசனல் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், மாணவர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடும் கல்லூரி  செயலாளர் ரகுநாதனை கைது செய்ய வலி யுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு மாணவர்கள் பேரணியாய் வந்து மனு கொடுத்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டிஆர்ஓ வாக்குறுதி அளித் தார். இதனால் மாணவர்கள் மீண்டும் கல்லூ ரிக்கு சென்று வந்தனர்.  இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் போராட்டம் நடத்தி மனு கொடுத்த மாணவர் களை மிரட்டி அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டு  வந்தது. மாணவர்களை கல்லூரி நிர்வாகம்  மிரட்டியதால் மீண்டும் இந்திய மாணவர்  சங்கத்தின் தலைமையில், கடந்த பிப்.2  அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஆர்ஓ-வை சந்தித்து மனு மீதான நடவ டிக்கை மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர் களை தொடர்ந்து மிரட்டி வருகிறது. பெற்றோர் களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தி கல்லூரி கட்டணத்தை வசூலிக்கிறது என புகார்  மனு கொடுக்கப்பட்டது. ஆனால் திருச்சி மாவட்ட நிர்வாகம், கல்லூரி நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் காலதாமதம் செய்கிறது. இதனால் திங்களன்று இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன்  தலைமையில், கல்விக் கட்டண கொள்ளை யில் ஈடுபடும் நேசனல் கல்லூரி நிர்வாகத் தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்ட ணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என  வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.   போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் சூர்யா, மாவட்ட துணைச்  செயலாளர் ஹரி மற்றும் கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டனர்.