districts

img

மீண்டும் வேலை வழங்க கோரி போராடிய ஒப்பந்த தொழிலாளர்கள், சிஐடியு-வினர் கைது

திருச்சிராப்பள்ளி, ஏப்.30 - திருச்சி மகாத்மா காந்தி நினைவு  அரசு மருத்துவமனையில் முதலமைச் சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா நோய் தொற்று காலத்திலும் அர்ப்பணிப்போடு பணி யாற்றினர்.  இந்நிலையில் கடந்த 2021 நவம்பர்  16 ஆம் தேதி முதல் 28 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்க ளது குடும்பம் இந்த வேலையை மட்டுமே  நம்பியுள்ளது. எனவே இவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ்  மீண்டும் வேலை வழங்க கோரி மகாத்மா  காந்தி நினைவு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில்  பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டன. ஆனால் இதுவரை வேலை வழங்கப்படவில்லை.  இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கக் கோரி சிஐடியு சார்பில் சனிக் கிழமை மருத்துவமனை முதல்வர் அலு வலகத்தில் முற்றுகை போராட்டம் அறி விக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடு வதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள், சிஐடி யுவினர், சிபிஎம் கட்சியினர் மருத்துவ மனை வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த உறையூர் காவல் உதவி ஆணையர் ராஜு பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். பேச்சு வார்த்தைக்கு சென்ற சிஐடியுவினரிடம் முறையாக பதில் அளிக்கவில்லை  எனக் கூறி, முதல்வர் அலுவலகத்தை முற்று கையிட முயன்றனர். அப்போது போலீ சார் கயிறு கட்டி அனைவரையும் தடுத்து  நிறுத்தினர். இதனால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இந்த  பேச்சுவார்த்தையில் மருத்துவமனை முதல்வர் பங்கேற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இருக்கை மருத்துவர்  சித்ரா, உதவி மருத்துவர் குணசேக ரன், மருத்துவர் மகாலட்சுமி ஆகியோரு டன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு மாநகர் மாவட்ட செயலா ளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் ராமர், மணிமாறன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையின் போது சிஐடியு  நிர்வாகிகள் கூறுகையில், 28 தொழிலாளர் களும் கடந்த 5 மாதமாக வேலை யிழந்து வறுமையில் வாடுகின்றனர். எனவே இவர்களுக்கு இந்த மருத்துவ மனையில் காலியாக உள்ள இடங்களில்  பணி வழங்க தமிழக அரசுக்கு பரிந்து ரைக் கடிதம் எழுத வேண்டும். ஒரு சிலருக் காவது உடனே வேலை வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து மருத்துவ முதல்வரிடம் பேசி,  ஒரு கால அவகாசத்தை தெரிவிக்கு மாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு மருத்துவ தரப்பில் நாங்கள் அரசுக்கு கடிதம் எழுத முடியாது. தனி யார் ஒப்பந்த கம்பெனிக்கு மட்டுமே  கடிதம் எழுத முடியும். மேலும் தற்போது  மருத்துவமனை முதல்வரிடம் பேச முடி யாது என தெரிவித்து விட்டனர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சிஐடியுவினர் மருத்துவமனை முதல்வர் அலுவலகம் முன்பு அமர்ந்தும், தரை யில் படுத்தும் முழக்கமிட்டபடி முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக  தூக்கி சென்று கைது செய்தனர்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சிஐடியு நிர்வாகிகள் மணிமாறன், செல்வி, மணிகண்டன், வீர முத்து, செல்வராஜ், சந்துரு, ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.