districts

img

கூலி உயர்வு கேட்டு கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்ll

திருநெல்வேலி, ஜன. 1- நெல்லை பழைய பேட்டை கொடிமரம் ஸ்டாப்பில் பித்தளை பாத்திர தொழிலாளர் கள் கூலி உயர்வு கேட்டும் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க கோரி யும்  கஞ்சி  தொட்டி   திறக்கும் போராட்டம் நடத்தினர்.     இந்த போராட்டத்திற்கு பொதுத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.முருகன் கஞ்சிதொட்டி போராட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். பொதுத்தொழிலாளர் சங்க மாவட்டத்  தலைவர் எல்.சரவணபெருமாள்,  மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நெல்லை  தாலுகா செயலாளர் துரை. நாராயணன்,  அரசு போக்குவரத்து கழக சங்கத்தின்  மாவட்ட தலைவர் டி.காமராஜ், பித்தளை பாத்திர  சங்க தலைவர் முத்து, செயலாளர் சேட் உள்ளிட்டோர் உரையாற்றினர்.                   சிஐடியு மாவட்ட தலைவர்  பீர்முகம் மதுஷா,  கஞ்சி தொட்டி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார், இந்த போராட்டத்தில்  90க்கும் மேற்பட்ட க்கும் பித்தளை பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.