districts

img

விவசாயிகளுக்கான இழப்பீட்டை தரக் கோரி திருக்கடையூரில் 2-ஆவது நாளாக போராட்டம்

மயிலாடுதுறை, டிச.22 - மயிலாடுதுறை மாவட்டம் திருக் கடையூரில் நான்கு வழிச்சாலை யால் நிலங்களையும், குடியிருப்பு களையும் இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வீடுகளை இழப்ப வர்களுக்கு மாற்று இடமும் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று காலை துவங்கிய போராட்டம் இரவு-பகலாக, கடுங்குளிரிலும் தொ டர்ந்து 2-வது நாளாக புதனன்றும் நடைபெற்றது.  இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன் தலைமை வகித்தார். கட்சி பாகுபா டின்றி அனைத்து அரசியல் கட்சியி னரும் தொடர்ந்து ஆதரவு அளித்து  உதவிகளை செய்து வருகின்றனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனி வாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர்  சாமி.நடராஜன், விவசாய சங்க  மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ், சிபிஎம் தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், செம்ப னார்கோவில் ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், ஏ.வி.சிங்காரவேலன், ப.மாரி யப்பன், ஜி.வெண்ணிலா, சி.விஜய காந்த், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரி யேல், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பின் மாமாகுடி ஆனந் தன், ராஜராஜன், விவசாய சங்க  ஒன்றிய செயலாளர் சந்திரமோ கன், மாவட்ட பொருளாளர் வைர வன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள், வாலிபர் சங்கம், மாதர்  சங்கம், விவசாய தொழிலாளர் சங்க  நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளாக கலந்து கொண்டனர்.

அலட்சியப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்

இரண்டு நாள்களாக தொடர்ந்து இரவு-பகலாக போராட்டங்கள் நடைபெற்றும்கூட மாவட்ட ஆட்சி யர் தலைமையிலான மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகளிடம்  பேச்சு வார்த்தை நடத்தி இழப்பீடு தருவ தற்கான நடவடிக்கைகளில் ஈடு படாமல் அலட்சியம் காட்டி வருவது  மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

சிவப்பு துண்டே போர்வையானது

செவ்வாயன்று இரவு போராட் டக் களத்திலேயே தற்காலிக பந்தல் அமைத்தபோது பாதுகாப்புக்கு வந்த சீர்காழி டிஎஸ்பி லாமேக், ‘பந்தல் போடக்கூடாது’ என கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அனுமதித்ததையடுத்து கடுமையான பனிப்பொழிவிலும் தோளில் கிடந்த சிவப்பு துண்டே போர்வையாக மாறியது. இரவு  முழுவதும் குளிரில் போராட்டத்தை தோழர்கள் தொடர்ந்ததோடு அங்கேயே கஞ்சி காய்ச்சி பசியாறி னர்.  இந்நிலையில் போராட்டக் களத்திற்கு வந்த சாவடி பாலு என்கிற விவசாயி, 20 கிலோ ரவை  மூட்டையுடன் போராட்டக் களத்திற்கு வந்து, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசனிடம் வழங்கி  போராட்டத்திற்கு ஆதரவளித்தார். ‘எத்தனை நாட்கள் கடந்தாலும்  கோரிக்கைகள் நிறைவேறினால் தான் எங்களுக்கு வேறு வேலையே’  என்று உறுதியோடு போராடும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  உள்ளிட்ட போராட்டக் குழுவிற்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.