districts

img

வேலை நிறுத்த விளக்க  தெருமுனை பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, மார்ச்.25- கட்டுமான, உடல் உழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக மார்ச் 28-ஆம் தேதி திருவெறும்பூரில் நடைபெறவுள்ள மறியலை விளக்கி வெகு ஜன அரங்கங்கள் சார்பில் வேங்கூரில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.  பிரச்சாரத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தெய்வநீதி தலைமை வகித்தார். இதில் ஒன்றிய செயலாளர்  முருகேசன், சிபிஎம் தாலுகா செயலாளர் மல்லிகா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் குருநாதன், ஒன்றிய தலைவர் கணேசன், வாலிபர் சங்க சங்கர், பார்த்திபன், மாற்றுத்திறனாளிகள் சங்க சித்ரா, தாலுகா குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.